Thursday 27 October 2016

ராஜ்ய புரஸ்கார் விருது பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆளுநர் விருது (ராஜ்ய புரஸ்கார்) பெற்ற சாரணர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சாரண ஆசிரியர் புகழேந்தி வரவேற்புரையாற்றினார். ஆசிரியர்கள் சசிகுமார், பிரியா ஆகியோர் விருது பெற்ற மாணவர்களை வாழ்த்தினர். தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் அவர்கள் விருது பெற்ற மாணவர்களையும் அதற்குக் காரணமாக இருந்த சாரண ஆசிரியரையும் பாராட்டினார். ராஜ்யபுரஸ்கார் விருது பெற்ற மாணவர்கள் அரவிந்தசாமி, மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோர் தங்களின் அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்துகொண்டனர். நிறைவாக மாணவர் வெங்கடேசன் நன்றி கூறினார். இப்பள்ளி அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் இப்பள்ளியிலிருந்து முதன்முதலாக இந்த விருதினை மாணவர்கள் பெறுவது குறிப்பிடத்தக்கது. மன்னம்பாடி மிகவும் பின்தங்கிய சிற்றூர். சாரணர் சீருடை வாங்குவதற்குக்கூட வசதியற்ற பொருளாதார சூழலில் உள்ள மாண்வர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனக்கள் மூலம் சீருடை வழங்கி பயிற்சி அளித்த சாரண ஆசிரியரை அனைவரும் பாராட்டினர்.