Friday 9 December 2016

மறைந்த முதல்வருக்கு அஞ்சலி

மறைந்த முதல்வருக்கு மன்னம்பாடி உயர்நிலைப்பள்ளியில் இன்று நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Thursday 27 October 2016

ராஜ்ய புரஸ்கார் விருது பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆளுநர் விருது (ராஜ்ய புரஸ்கார்) பெற்ற சாரணர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சாரண ஆசிரியர் புகழேந்தி வரவேற்புரையாற்றினார். ஆசிரியர்கள் சசிகுமார், பிரியா ஆகியோர் விருது பெற்ற மாணவர்களை வாழ்த்தினர். தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் அவர்கள் விருது பெற்ற மாணவர்களையும் அதற்குக் காரணமாக இருந்த சாரண ஆசிரியரையும் பாராட்டினார். ராஜ்யபுரஸ்கார் விருது பெற்ற மாணவர்கள் அரவிந்தசாமி, மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோர் தங்களின் அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்துகொண்டனர். நிறைவாக மாணவர் வெங்கடேசன் நன்றி கூறினார். இப்பள்ளி அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் இப்பள்ளியிலிருந்து முதன்முதலாக இந்த விருதினை மாணவர்கள் பெறுவது குறிப்பிடத்தக்கது. மன்னம்பாடி மிகவும் பின்தங்கிய சிற்றூர். சாரணர் சீருடை வாங்குவதற்குக்கூட வசதியற்ற பொருளாதார சூழலில் உள்ள மாண்வர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனக்கள் மூலம் சீருடை வழங்கி பயிற்சி அளித்த சாரண ஆசிரியரை அனைவரும் பாராட்டினர்.

Sunday 25 September 2016

மாணவர் செயல்திட்டம்


சுட்டி விகடனில் வெளியான மாணவர் செயல்திட்டங்கள்
நன்றி: சுட்டிவிகடன் பின்னப்பெருக்கல் காணொளிக்கு இங்கே சொடுக்குக

Tuesday 23 August 2016

சமபக்கமுக்கோணத்தின் சுழற்சிக்கோணம் செய்து கற்றல்

சமபக்க முக்கோணத்தின் சுழற்சிக்கோணம் 120 பாகை என்பதை செயல்வழியாகக் கற்கும் 7 ஆம் வகுப்பு மாணவியர். காணொளி காண இங்கே சொடுக்குக

மாணவர் செயல்பாடு

வளரறி மதிப்பீட்டு செயல்பாடுகள். மாணவர்களின் வளரறி மதிப்பீட்டு செயல்பாடுகள் சுட்டி விகடன் இதழில் வெளியானவை.

Wednesday 3 August 2016

மெய் நிகர் வகுப்பறை தொடக்கம்

அன்பாசிரியர் தொடரில் இப்பள்ளி ஆசிரியர் புகழேந்தி பற்றி படித்த பெயர் குறிப்பிட விரும்பாத கத்தார் நாட்டில் பணியாற்றும் அரசு பள்ளியில் படித்த தமிழர் ஒருவர் புதிதாக புரஜக்டர் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார் அந்த மகிழ்ச்சியை எளிமையாகக் கொண்டாட விரும்பினோம். விருத்தாசலம் கோட்டாட்சியர் திரு செந்தில்குமார் அவர்கள் பள்ளிக்கு வந்து புரஜக்டரை இயக்கி எம் மாணவர்களையும் எங்களையும் மகிழ்வித்தார்.புரவலருக்கு நன்றி.

Monday 4 January 2016

தேர்வுபெற்ற செயல்திட்டங்கள்

2015-16 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்தில் சுட்டிவிகடன் செயல்திட்டப் போட்டியில் தேர்வான எம் பள்ளி மாணவர்களின் செயல் திட்டங்கள்.

செயல் திட்டப் போட்டி 2015

2015 ஆம் ஆண்டில் மூன்றாம் பருவத்தில் புராஜக்ட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுட்டி விகடன் வழங்கிய சான்ற்தழ்களை மாணவர்களுக்கு வழங்கும் தலைமை ஆசிரியர். பரிசாகப் பெற்ற நூல்களை பள்ளி நூலகத்திற்கு வழங்கும் மாணவர்கள்.

வெள்ள நிவாரணம்

எம் பள்ளி மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்கினர். (போர்வை,பால்பவுடர்,பிஸ்கட், சோப்பு,தைலம்,சைபால்,நாப்கின் ஆகியவை)



மருத்துவ முகாம்

நல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினார்கள்

கலைக்கழகம் 2015


கலைக்கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு த்லைமை ஆசிரியர் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.
 மாணவிகளுக்கு நடனப்பயிற்சி வழங்கிய கரகாட்டக்கலைஞர் திருமதி லோகனாதனை பாராட்டும் தலைமை ஆசிரியர்
                                        மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்
                                                    பரிசுபெற்ற மாணவர்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடைகளை ஊராட்சி மன்றத்தலைவர் திரு.ந.நடேசன் வழங்கினார்.

குழந்தைகள் தின விழா 2015


பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு தலைமை ஆசிரியர் திரு.க.வீரபாண்டியன் பரிசுகள் வழங்கினார்.