Tuesday 4 November 2014

மன்னம்பாடி உயர்நிலைப்பள்ளியில் இலக்கியமன்ற விழா

          மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கியமன்ற விழா
இன்று (31.10.2014) நடைபெற்றது.

     விழாவுக்கு பொறுப்புத் தலைமை ஆசிரியர் முனைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் மலையரசன் வரவேற்றார். மாணவர்கள் அமர்நாத், சூரியமூர்த்தி ஆகியோர் தமிழிசைப் பாடல்கள் பாடினர். சிறப்பு விர்ந்தினராக முனைவர் கவிஞர் பட்டி சு.செங்குட்டுவன் கலந்துகொண்டு தமிழர்களின் தொன்மை நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை சங்க இலக்கியம் எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது மாணவர்கள் எவ்வாறு அவற்றைக் கற்பது என்பது குறித்து பல்வேறு இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர் தனேந்திரன் நன்றி கூறினார்.

ஆசிரியர்கள் கோபிநாத்,கோவிந்தராஜ்,வைத்தியநாதன், சுந்தரி, பிரியா, கார்த்திகேயன் ஆகியோர் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
     
        சிறப்பு விருந்தினர் கவிஞர் முனைவர் பட்டி சு,செங்குட்டுவன்              அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்படுகிறது.
              கவிஞருக்கு நினைவுப்பரிசாக நூல் வழங்கப்படுகிறது

                         கவிஞரின் சிறப்புரை