மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கியமன்ற தொடக்கவிழா 7-8-14 வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர் இரத்தின புகழேந்தி முன்னிலை வகித்தார். இலக்கியமன்ற செயலாளர் தமிழாசிரியர் மலையரசன் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு எழுத்தாளர் சிறப்புரையாற்றிய இமையம் , “தமிழ் இலக்கியத்தின் சிறப்புகளையும் தமிழ்ப் புலவர்களின் பெருமைகளையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். மேலும் மாணவர்கள் அழியாச் செல்வமாகிய அறிவுச்செல்வத்தை சேர்க்கவேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் வாழக்கூடிய படைப்புகளைத் தந்த புலவர்களை நாம் இன்றும் மறக்காமல் இருக்கிறோம் என்றால் அவர்களின் படைப்புகளின் வலிமையை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்”. என்று மாணவர்களின் சிந்தனையைத்தூண்டினார். ஆசிரியர்கள் கோபினாத், கோவிந்தராஜ், இளநிலை உதவியாளர் சித்ரா ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
ஆசிரியர் கோபினாத் நன்றி கூறினார்.
மலையரசன் வரவேற்புரைதலைமை ஆசிரியர் தலைமை உரை
சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் இமையத்திற்கு பொன்னாடை அணிவித்தல்
எழுத்தாளருக்கு நினைவுப் பரிசு
எழுத்தாளர் இமையம் அவர்களை அறிமுகம் செய்தல்
சிறப்புரை : எழுத்தாளர் இமையம்
நன்றியுரை கோபினாத்.
No comments:
Post a Comment